அன்னூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: அர்ஜுன் சம்பத் பங்கேற்பு

அன்னூரில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் வீட்டில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அர்ஜுன் சம்பத் பங்கேற்றார்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் சிலையை பிரதிஷ்டை செய்தார் அர்ஜுன் சம்பத்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அன்னூர் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கடிதம் கொடுத்து வந்தனர். ஆனால், புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.



இதனை எதிர்த்து, கடந்த வாரம் அன்னூர் பேருந்து நிலையம் முன்பு அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் இந்து மக்கள் கட்சியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி நாள் வரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி குட்டி ராஜேந்திரனின் வீடு அமைந்துள்ள அன்னூர் ஏ எம் பாளையம் பகுதியில், அவரது வீட்டில் ஆறு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்தால் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய அன்னூர் போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், வீட்டிலேயே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...