விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் முந்தி விநாயகர் 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் காட்சி

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார். பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்கின்றனர்.



Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 40 கிலோ சந்தன காப்பு மற்றும் 2 டன் மலர்களுடன், ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அதிகாலை முதலே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைகளுள் ஒன்றான, பிரசித்தி பெற்ற கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை 16 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேக பொருட்களால், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை மட்டுமின்றி அன்டை மாவட்ட பக்தர்களும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு வந்து அதிகாலை முதலே பக்தியுடன் முந்தி விநாயகரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...