கோவை விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் தொடக்கம்: மத்திய அமைச்சர் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு காணொலி காட்சி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் விமான நிலைய செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்கும்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் 'டிஜி யாத்ரா' திட்டம் இன்று தொடங்கப்பட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்வில், காணொலி காட்சி மூலம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு 'டிஜி யாத்ரா' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விமான பயணிகளின் வசதிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் 'டிஜி யாத்ரா' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஹைதராபாத், கொல்கத்தா, விஜயவாடா, புனே, மும்பை, கொச்சி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி விமான நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக கோவை உள்ளிட்ட பாட்னா, ராய்பூர், புவனேஸ்வர், கோவா(தாபோலிம்), இந்தூர், பாக்டோகரா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மத்திய அமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, "பொதுவாக பயணிகள் 'போர்டிங் பாஸ்' பெற விமான நிலைய வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்திலும் மத்திய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சகம் சார்பில் 'டிஜி யாத்ரா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."

பயணிகள் முதலில் 'டிஜி யாத்ரா' செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் மொபைல் எண், போர்டிங் பாஸ், ஆதார், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தால் பிரத்யேக 'கியூ ஆர் கோடு' கிடைக்கும்.

அதை வைத்து விமான நிலையத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்ட வழியில் உள்ள டிஜிட்டல் கருவியில் மொபைல் போனில் உள்ள விவரங்கள் மற்றும் தங்களின் முகத்தை காண்பித்து உடனடியாக ஒப்புதல் பெற்று உள்ளே செல்லலாம். குறிப்பாக மொபைல் போன் எண்ணுடன் ஆவணங்கள் அனைத்தும் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...