மடத்துக்குளம் அருகே கிரஷர்களால் பாதிப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று உடுமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.



உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். தென்னை மரங்களை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது, உடுமலை கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாதது, நடமாடும் கால்நடை வாகனத்தில் மருந்துகள் இருப்பு இல்லாதது போன்ற பிரச்சினைகளை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு, புதிய பஸ் நிலையத்தின் காம்பவுண்ட் சுவர் பாதையை அடைப்பது, சங்கர்நகர், எஸ்.வி.புரம், எஸ்.எஸ். காலனி பகுதிகளில் முகமூடி அணிந்த நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.



உடுமலை பிஏபி கால்வாயின் கரையில் கழிவுகள் கொட்டப்படுவது, உடுமலை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாதது, வாகன நெருக்கடி, கமிஷன் முறை பிரச்சினைகள், உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மடத்துக்குளம் அருகே தூங்காவி பகுதியில் உள்ள கிரஷர்களால் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மடத்துக்குளம் மைவாடி பகுதியில் அரசு ஊழியருக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை மற்றும் கிணறு அமைக்கப்பட்டது குறித்தும், உடுமலை மற்றும் மடத்துக்குளம் நில அளவைத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...