உடுமலையில் குடும்பத் தகராறு: மச்சானுக்கு மாமன் அரிவாள் வெட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குடும்பத் தகராறு காரணமாக மாமன் தனது மச்சானை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பட்டப்பகலில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு இளைஞர் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அடுத்த பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக போடிபட்டி காமராஜ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான செந்தில்குமார், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்குமாரின் மனைவி கலைச்செல்வி, தனது சகோதரர் சதீஷ்குமார் (29) இடம் கணவரின் கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளார். இதனையடுத்து, சதீஷ்குமார் தனது மைத்துனர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்க சென்றுள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த அரிவாளை எடுத்து சதீஷ்குமாரின் கழுத்து மற்றும் கையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

உடனடியாக பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



சம்பவம் குறித்து தகவலறிந்த உடுமலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளியான செந்தில்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். செந்தில்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.

இச்சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக நடந்த இந்த வன்முறை சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...