சிறுமுகை அருகே பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடைத்த விவரங்களின்படி, சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



தகவல் அறிந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் லைப் காட் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மிதந்து வந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தின் அடையாளத்தை கண்டறியவும், மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...