வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள்: மேற்கு மண்டல தலைவர் மரியாதை

கோவை வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: வடவள்ளி பழைய பேருந்து நிலையத்தில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (5/9/2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், வேலுச்சாமி, மகாலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மதன், கதிரேசன், சீனிவாசன், சுந்தர்ராஜன், சூர்யா, ஜேம்ஸ் உள்ளிட்ட கழக தோழர்களும், வஉசி பேரவை நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களையும், தமிழ் மொழி மீதான அவரது பற்றையும் நினைவு கூர்ந்த பங்கேற்பாளர்கள், அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...