வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள்: மேற்கு மண்டல தலைவர் மரியாதை

கோவை வடவள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: வடவள்ளி பழைய பேருந்து நிலையத்தில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (5/9/2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், வேலுச்சாமி, மகாலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மதன், கதிரேசன், சீனிவாசன், சுந்தர்ராஜன், சூர்யா, ஜேம்ஸ் உள்ளிட்ட கழக தோழர்களும், வஉசி பேரவை நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களையும், தமிழ் மொழி மீதான அவரது பற்றையும் நினைவு கூர்ந்த பங்கேற்பாளர்கள், அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...