விநாயகர் சதுர்த்தி: டாஸ்மாக் கடைகளுக்கு இரு நாள் விடுமுறை வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 16.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், "தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகள் மற்றும் தங்கள் பகுதிகளில் 15 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்" என்றார்.

திருப்பூரில் நான்காவது நாளும், கோவையில் ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். "விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம். மற்ற மத பண்டிகைகள் போல இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட உள்ளதாகவும், திருப்பூரில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும், "விநாயகர் சிலைகள் வைக்க சில பகுதிகளில் போலீசார் மூலம் நெருக்கடி தரப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். "உளவுத்துறை மூலம் திருப்பூரில் வாழும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார். நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...