விநாயகர் சதுர்த்தி: டாஸ்மாக் கடைகளுக்கு இரு நாள் விடுமுறை வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 16.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், "தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகள் மற்றும் தங்கள் பகுதிகளில் 15 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்" என்றார்.

திருப்பூரில் நான்காவது நாளும், கோவையில் ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். "விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம். மற்ற மத பண்டிகைகள் போல இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட உள்ளதாகவும், திருப்பூரில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும், "விநாயகர் சிலைகள் வைக்க சில பகுதிகளில் போலீசார் மூலம் நெருக்கடி தரப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். "உளவுத்துறை மூலம் திருப்பூரில் வாழும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார். நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...