அன்னூர் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அன்னூர் அருகே பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் கிராமத்தில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் பகுதியில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அம்மா செட்டி புதூர் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியாகவும் உள்ளது. அண்மையில் இங்கு இடம் வாங்கிய தொழிலதிபர் காஸ்டிங் அல்லது இரும்பு ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



ஆலைக்கு முன்னோட்டமாக ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் சாலை ஓரத்தில் உள்ள நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை அமைப்பதாக குற்றம்சாட்டி அம்மா செட்டி புதூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலம் காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையையும், மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடும் நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து தனியார் ஒருவர் லாப நோக்கில் செயல்படுவதை தடுக்க வலியுறுத்தி கட்டுமான பணிகளை தடுக்கும் நோக்கில் கட்டுமானங்களுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சுற்றுச்சுவர் அமைக்க சட்டவிரோதமாக சுமார் 20 அடிக்கும் மேல் திறந்த வெளியில் ஆழ்குழாய் கிணறு போன்று குழிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் குழந்தைகள் வைத்திருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...