உடுமலை சந்தையில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை சந்தையில் தக்காளி விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 14 கிலோ பெட்டி ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையாகிறது. விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி ஆண்டு முழுவதும் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், பருவ மழை மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக தக்காளி அறுவடையின் போது தக்காளி பழங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும், திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்த காரணத்தால், கடந்த சில வாரங்களில் 14 கிலோ பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், ஒரு சில இடங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் மாடுகளை மேய விட்டும், மற்றும் சாலை ஓரங்களில் கொட்டியும் வந்தனர்.



இந்நிலையில், தற்போது இன்று தக்காளி வரத்து அதிகமானாலும், 14 கிலோ பெட்டி ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்சமயம் மற்ற மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து சீராக உள்ளதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...