உடுமலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

உடுமலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அச்சம். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.



Coimbatore: உடுமலையில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாடி வருவதாகவும், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அய்யலுமீனாட்சி நகர், எஸ்.எஸ். காலனி, எம்.எம். லே அவுட், வேலுச்சாமி நகர், சங்கர் நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிகிறது. முகமூடி அணிந்த இந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், பொதுமக்கள் சத்தமிட்டால் தப்பி ஓடுவதாகவும் கூறப்படுகிறது.



காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முகமூடி அணிந்த இந்த நபர்கள் எவ்வித பயமுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதுவரை இந்த மர்ம நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடுமலை பகுதியில் கூடுதல் காவல்துறையினரை நியமித்து ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...