உடுமலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

உடுமலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அச்சம். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.



Coimbatore: உடுமலையில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாடி வருவதாகவும், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அய்யலுமீனாட்சி நகர், எஸ்.எஸ். காலனி, எம்.எம். லே அவுட், வேலுச்சாமி நகர், சங்கர் நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிகிறது. முகமூடி அணிந்த இந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், பொதுமக்கள் சத்தமிட்டால் தப்பி ஓடுவதாகவும் கூறப்படுகிறது.



காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முகமூடி அணிந்த இந்த நபர்கள் எவ்வித பயமுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதுவரை இந்த மர்ம நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடுமலை பகுதியில் கூடுதல் காவல்துறையினரை நியமித்து ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...