குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி


கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பு இன்று கோவையில் உள்ள மூன்று குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.



கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள சங்கர நாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை மற்றும் நாகராஜபுரம் சாலையில் உள்ள மூன்று குளங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அதனை தூர்வாரும் பணி நடபெற்று வருகிறது.



பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணிகளுக்கான நிதி உதவியை ரோட்டரி க்ளப் ஆப் கோயம்பத்தூர் சென்ட்ரல் மற்றும் ஜி.இ.ஆயில் நிறுவனங்கள் வழங்கின.



சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் இந்த குளங்களில் இன்று காலை பூஜை நடைபெற்றது. இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி க்ளப் சென்ட்ரல் தலைவர் மாணிக்கம், ஜி.இ.ஆயில் நிறுவனத்தின் அதிகாரி பல்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் இந்த குளம் தூர்வாரப்படும் என்றும் அடுத்த பருவமழையின் போது இந்த குளங்களில் நீர் தேங்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...