கோவை: மதுக்கரை மற்றும் செங்கத்துறை பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் மதுக்கரை மற்றும் செங்கத்துறை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மதுக்கரை மற்றும் செங்கத்துறை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 5) பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மதுக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (செப்டம்பர் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கே.ஜி.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைப்புதூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அதேபோல், செங்கத்துறை துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பிஎன்பி நகர் மற்றும் மதியழகன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மின்தடை குறித்த தகவலை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...