கோவை கோவில்பாளையத்தில் 1.200 கிலோ கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

கோவை கோவில்பாளையம் விஸ்வாசபுரம் அருகே போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கோவை கோவில்பாளையம் விஸ்வாசபுரம் அருகே போலீசார் இன்று (செப்டம்பர் 3) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி வழியாக வந்த இளைஞர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் தீபக்குமார் (19) மற்றும் சிந்து ஜான் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 1.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...