கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை

கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நொய்யல் ஆற்றுக்கு மாற்றாக சிலை கரைப்பதற்கு மாற்று இடம் கோரிக்கை.


கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.3) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் விநாயகர் சிலையை அங்கு கரைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு மாற்றாக, சிறிய குளத்தில் சிலையை கரைப்பதற்கு ஏற்ற மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்றியும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...