கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை

கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நொய்யல் ஆற்றுக்கு மாற்றாக சிலை கரைப்பதற்கு மாற்று இடம் கோரிக்கை.


கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.3) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் விநாயகர் சிலையை அங்கு கரைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு மாற்றாக, சிறிய குளத்தில் சிலையை கரைப்பதற்கு ஏற்ற மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்றியும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...