கோவை பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: பூலுவபட்டி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இக்கூட்டம் பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும், இக்கூட்டத்தில் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...