ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் போலி பெண் காவலர் கைது

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை தினத்தன்று போலி காவலர் உடையணிந்து பணிபுரிந்த பெண் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 34 வயது பெண் காவல்துறை மீதான ஆர்வத்தால் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.


Coimbatore: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் போலி காவலர் உடையணிந்து பணிபுரிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், விஐபிக்கள் வரிசையில் முதல் நிலை காவலர் உடையணிந்த பெண் ஒருவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியில் இருந்த ஆனைமலை போலீசார் அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலி காவலர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தப் பெண் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரீத்தா (34) என்பது தெரியவந்தது. மேலும், காவல் பணியின் மீதுள்ள ஆர்வத்தினால் காவல்துறை உடை அணிந்து பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் போலி காவலர்கள் செயல்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இது போன்ற சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...