வருடத்திற்கு இருமுறை முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை பெற வேண்டும்: கோவையில் கார்த்திக் சிதம்பரம் கருத்து

கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் எம்.பி., முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள், சென்னை பார்முலா 4 கார் பந்தயம், கூவம் நதி சுத்திகரிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை மதுராநகர் பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் நிர்வாகி மோகன் ராஜ் - கவுசல்யா தம்பதியினரின் மகன் சத்தியசீலன் - பிரீத்தி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளில் சென்று முதலீடு பெறுவது ஒரு தேவையான ஒன்று. வருடத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை கூட சென்று முதலீடு பெறலாம். அதை நான் வரவேற்கிறேன். இதனால் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது," என்றார்.



சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "சென்னையில் கார் ரேஸ் போன்ற நிகழ்ச்சி நடத்துவதால், சென்னை மாநகரம் உலக அளவில் தெரியப்படுத்தக்கூடிய பகுதியாக அறியப்படுகிறது. அதை நான் வரவேற்கிறேன்," என்று கூறினார்.

கூவம் நதி சுத்திகரிப்பு பணிகள் குறித்து பேசிய கார்த்திக் சிதம்பரம், "கூவம் நதியை சுத்தப்படுத்துவதாக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக சென்னை மேயர் தனது செய்தியில் கூறியுள்ளார். அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டுள்ளேன். அதில் செலவிடப்பட்ட தொகை சரியானதா, தூய்மை செய்தும் ஏன் தூய்மை அடையவில்லை, அதற்கான காரணம் என்ன, அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் கேட்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் மொழி திணிக்கப்படுவதில்லை என்றும் கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டார்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...