வருடத்திற்கு இருமுறை முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை பெற வேண்டும்: கோவையில் கார்த்திக் சிதம்பரம் கருத்து

கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் எம்.பி., முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள், சென்னை பார்முலா 4 கார் பந்தயம், கூவம் நதி சுத்திகரிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை மதுராநகர் பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் நிர்வாகி மோகன் ராஜ் - கவுசல்யா தம்பதியினரின் மகன் சத்தியசீலன் - பிரீத்தி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளில் சென்று முதலீடு பெறுவது ஒரு தேவையான ஒன்று. வருடத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை கூட சென்று முதலீடு பெறலாம். அதை நான் வரவேற்கிறேன். இதனால் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது," என்றார்.



சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "சென்னையில் கார் ரேஸ் போன்ற நிகழ்ச்சி நடத்துவதால், சென்னை மாநகரம் உலக அளவில் தெரியப்படுத்தக்கூடிய பகுதியாக அறியப்படுகிறது. அதை நான் வரவேற்கிறேன்," என்று கூறினார்.

கூவம் நதி சுத்திகரிப்பு பணிகள் குறித்து பேசிய கார்த்திக் சிதம்பரம், "கூவம் நதியை சுத்தப்படுத்துவதாக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக சென்னை மேயர் தனது செய்தியில் கூறியுள்ளார். அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டுள்ளேன். அதில் செலவிடப்பட்ட தொகை சரியானதா, தூய்மை செய்தும் ஏன் தூய்மை அடையவில்லை, அதற்கான காரணம் என்ன, அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் கேட்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் மொழி திணிக்கப்படுவதில்லை என்றும் கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...