சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு மீட்பு

கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் சஜீஸ் பாம்பை மீட்டு காட்டில் விடுவிக்க உள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு போட்டோ ஸ்டுடியோ முன்பு சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

தினேஷ் என்பவர் தனது வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என்று பார்க்க ஸ்கூட்டரின் டேங்கைத் திறந்த போது அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அருகில் இருந்த பாம்பு பிடி வீரர் சஜீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜீஸ், இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அவர் அந்த பாம்பு அரிய வகை மண்ணுளிப் பாம்பு என்று தெரிவித்தார். இந்த வகை பாம்பின் வால் பகுதியும் தலை போன்று இருப்பதால், இரண்டு தலை உள்ள பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது என்றார்.

மேலும், இந்த பாம்பு விஷத்தன்மை அற்றது என்றும், மருத்துவ நோக்கங்களுக்காக சிலர் இதை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் சஜீஸ் விளக்கினார். பிடிபட்ட மண்ணுளிப் பாம்பை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த காட்டில் விடுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...