கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

கோவை பெரிய கடைவீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை செப்டம்பர் 2 முதல் 12 வரை நடைபெறுகிறது. பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் 10% தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை பெரிய கடைவீதியில் இயங்கி வரும் பூம்புகار் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி செப்டம்பர் 2 முதல் 12 வரை, தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.



இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



இவற்றில் பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகள் அடங்கும்.



மேலும், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ் மற்றும் களிமண் பொம்மைகள், நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடு, துணியில் வரைந்த ஓவியங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.



கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுவதாக பூம்புகார் விற்பனை நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...