அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.



அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர். கோவிலின் கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.



மேலும், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியும், பில்லி சூனியம் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டியும் நீதி கல்லில் மிளகாய் அரைத்து பூசி வழிபாடு செய்தனர்.



கோவில் நிர்வாகம் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பு நலன் கருதியும் தடுப்புகள் அமைத்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...