கோவையில் தனியார் பள்ளிகளில் சாதி, மத விபரங்கள் கேட்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மத விபரங்களை கேட்பதாக தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தலைவர் நேருதாஸ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி மற்றும் மத விபரங்களை கேட்பதாக தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தலைவர் நேருதாஸ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நேருதாஸ் தனது மனுவில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் விபரக் குறிப்பேட்டில் சாதி மற்றும் மத விபரங்களை குறிப்பிடுமாறு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் முறையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த முறையீட்டின் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) 10.07.2023 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், "குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுய விவரப்படிவத்தில் இக்கல்வியாண்டு முதல் (2023-2024) குறிப்பிடக்கூடாது" என்று அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் தொடர்ந்து மாணவர்களின் சாதி மற்றும் மத விபரங்களை கேட்பது அதிர்ச்சி அளிப்பதாக நேருதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை அனைத்து தனியார் பள்ளிகளிலும் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீறும் பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேருதாஸ் தனது மனுவில் கோரியுள்ளார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...