கோவை வார்டு 2-ல் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு: எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை வார்டு 2-ல் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2-க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு, குமாரசாமி அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவின் போது எம்பி கணபதி ராஜ்குமார் மரக்கன்று நட்டு வைத்தார்.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்களான கற்பகம், புஷ்பமணி, சித்ரா தங்கவேல், சாந்தாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.



மாநகராட்சி அதிகாரிகளான உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்டோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...