கோவை வார்டு 2-ல் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு: எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை வார்டு 2-ல் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2-க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு, குமாரசாமி அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவின் போது எம்பி கணபதி ராஜ்குமார் மரக்கன்று நட்டு வைத்தார்.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்களான கற்பகம், புஷ்பமணி, சித்ரா தங்கவேல், சாந்தாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.



மாநகராட்சி அதிகாரிகளான உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்டோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...