கோவை வார்டு 2-ல் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு: எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை வார்டு 2-ல் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2-க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு, குமாரசாமி அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவின் போது எம்பி கணபதி ராஜ்குமார் மரக்கன்று நட்டு வைத்தார்.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்களான கற்பகம், புஷ்பமணி, சித்ரா தங்கவேல், சாந்தாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.



மாநகராட்சி அதிகாரிகளான உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்டோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...