விநாயகர் சதுர்த்தி: களிமண் சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண் சிலைகளை மட்டுமே குறிப்பிட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சியரின் அறிவிப்பில், களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், நெகிழி மற்றும் தெர்மாகோல் கலவையற்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலைகளை தயாரிக்க அல்லது அலங்காரம் செய்ய வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவது குறித்தும் ஆட்சியர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும், மாறாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை பொதுமக்கள் அணுகலாம் என்றும் ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விழாவைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...