கோவை GV ரெசிடென்சி பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம்

கோவை GV ரெசிடென்சி பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.


Coimbatore: கோவை GV ரெசிடென்சி பகுதியில் அமைந்துள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை பசுமைப் பரப்பாக மாற்றி அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டப்பணிகளை சிங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கழக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளருமான மணிசுந்தர் தலைமையில் ஒரு குழு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவில் மருத்துவர் அணி அமைப்பாளர் பிரதீப், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜவஹர் வெள்ளிங்கிரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நேரில் சென்று இப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தரமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



இந்த திட்டம் நிறைவடைந்தால், GV ரெசிடென்சி பகுதி மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பூங்காவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பகுதியின் அழகையும் மேம்படுத்தும் என்பதோடு, மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...