தேவனூர்புதூர், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

கோவையில் தேவனூர்புதூர், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.2) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.


Coimbatore: கோவையில் தேவனூர்புதூர் மற்றும் முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 2) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சின்ன பொம்மன்சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தனாரிபாளையம், புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பை-பாஸ் ரோடு ஒரு பகுதி மற்றும் குரும்பபாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எனவே, மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...