கோவை தடாகம் அருகே காட்டு யானை தாக்குதல்: வீடு சேதம், மாட்டு தீவனம் சூறையாடல்

கோவை தடாகம் அருகே காட்டு யானை ஒன்று வீட்டை சேதப்படுத்தி, மாட்டு தீவனங்களை உண்டதாக புகார். விவசாயிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: கோவை சின்ன தடாகம் பகுதியில் காட்டு யானை ஒன்று வீட்டை சேதப்படுத்தி, மாட்டு தீவனங்களை உண்டு சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கும், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உணவுகளை உண்டு பழகிய காட்டு யானைகள் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப்பகுதிகளுக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன.



இந்நிலையில், செப்டம்பர் 1 அதிகாலை சின்ன தடாகம் பகுதியில் உள்ள வடவள்ளிக்காரர் என்ற சண்முகம் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை சேதப்படுத்தி ஒரு காட்டு யானை உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் சென்று மேற்கூரைகளை சேதப்படுத்தி, அங்கு மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்களை தின்று, தூக்கி வீசி சூறையாடி சென்றுள்ளது.

மேலும், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு மற்றும் வனத் துறையினர் யானைகள் மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஏற்பட்ட சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...