உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. உடுமலை - மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முக்கியமாக, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அவர்களை டி பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும், கருணை அடிப்படையில் மறைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.



இந்நிகழ்வில் உடுமலை வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, வட்டத் தலைவராக கிரி, துணைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக பரமேஸ்வரன், துணைச் செயலாளராக அழகிரி, பொருளாளராக கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதியாக பழனிச்சாமி மற்றும் திருமதி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில சங்க ஆலோசகர்களான மாரியப்பன், மகேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட தணிக்கையாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மடத்துக்குளம் வட்ட நிர்வாகிகளான கருப்புசாமி, பொன்னுச்சாமி, ராஜலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...