கோவை துடியலூரில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கல்; திமுக உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்

கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டன. திமுக உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர். எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



கோவை: கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் துடியலூர் பகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.



விஸ்வநாதபுரம் 1வது வட்ட கழக அவைத்தலைவர் செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி தலைமை வகித்தார். ஐ.டி விங் மாவட்ட செயலாளர் கேபில் மணிகண்டன், பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், 1 வது வட்ட கழக செயலாளர் சாந்திபூசன், 14 வது வட்ட கழக செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், 15 மற்றும் 15ஏ ஆவது வட்டக் கழக செயலாளர்கள் சுரேஷ்குமார், சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் பேசுகையில், "வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அயராது உழைக்க வேண்டும். இதற்காக நமது ஆட்சியில் மக்களுக்காக செய்த நற்பணிகள் குறித்தும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஏமாற்றுவேலைகள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் பூத்கமிட்டி வேலைகளை சரியாக செய்ய வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக 1வது வார்டு துணை செயலாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் சவுந்திரராஜ், தனுஷ்குமார் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பி.ஆர்.ஜி.அருண்குமார் கட்சி சால்வைகளை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 1வது வட்ட கழக நிர்வாகிகள் முத்து, சண்முகசுந்தரம், செல்வராஜ், மோகன்ராஜ், ரங்கநாதன், நந்தகோபால், ராஜகோபால், பதமநாபன், சம்பத், கணேஷன், ஜீவா, கெளதம், கவிப்பிரியா, தீரவிக்ரமன், 14வது வட்ட கழக நிர்வாகிகள் சி.டி.சி செல்வம், ரமேஷ்குமார், சென்னியப்பன், கலா, விக்னேஷ், மாடசாமி, சிவமூர்த்தி, சிவகுமார், சரவணன், 15 மற்றும் 15 ஏ வட்டகழக நிர்வாகிகள் நடராஜ், நந்தகுமார், ரமேஷ், ராஜேஷ், வீரப்பன், பழனிச்சாமி, கருப்புசாமி, அபிபுல்லா, கணேஷன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...