உடுமலைப் பகுதியில் யானை தாக்கி மலைவாழ் மக்கள் படுகாயம் - அவசர சிகிச்சைக்கு போராட்டம்

உடுமலை அருகே யானை தாக்கியதில் மலைவாழ் மக்கள் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவசர சிகிச்சைக்கு தொட்டிலில் சுமந்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகளுக்காக போராட்டம்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், திருமலை மலை கிராமத்தில் சாகுபடி பணிக்காக சென்ற குருமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த வெங்கிட்டான் (50) என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மலைவாழ் மக்கள் காயமடைந்த வெங்கிட்டானை சிகிச்சைக்காக தொட்டிலில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், மலைவாழ் மக்கள் தங்களது அடிப்படை வசதிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.



மலைவாழ் மக்கள் தெரிவித்ததாவது, "அவசர அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை வசதியை ஏற்படுத்தித் தர கோரி தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆனால் இன்று வரையிலும் அதை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விபத்து மற்றும் அவசரகால உதவியைப் பெறுவதில் தடங்கல்கள் ஏற்படுகிறது. அப்போது சிகிச்சை பெறுவதற்கான பொன்னான நேரம் போராட்டத்திலேயே கழிந்து விடுவதால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மலைவாழ் குடியிருப்புகளில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது," என்றனர்.

இதற்கிடையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கிட்டானை உடுமலை வனச்சரகர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், வனத்துறை சார்பில் முதல் கட்ட நிதியாக ரூ.10,000 வழங்கினார்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...