தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட தர தாமதிக்கிறார்கள் - திருச்சி சிவா எம்.பி.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சித்தார். தமிழகத்திற்கான உரிமைகளை வழங்குவதில் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டினார்.



Coimbatore: கோவை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

திருச்சி சிவா கூறுகையில், "தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட தர தாமதிக்கிறார்கள். முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். எங்களைப் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறோம். ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் காட்டக்கூடாது. வட மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழ்நாடு பலவகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த மாநிலத்தை வேறு கட்சி ஆள்கிறது என்ற பார்வையை ஒன்றிய அரசு தவிர்த்திட வேண்டும்," என்றார்.



திருச்சியில் NIT கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. அரசுகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்," என்று பதிலளித்தார்.

மேலும் அவர், "கொல்கத்தா விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதை குறை சொல்லவில்லை. ஆனால் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் இது குறித்து அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை. நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்து இந்த அரசின் செயல்பாடுகளை எடை போட வேண்டும்," என்று தெரிவித்தார்.



"ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும். அந்த வகையில் தான் பழனி முருகன் மாநாட்டை பார்க்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

திருச்சி சிவா தனது உரையை முடிக்கும்போது, "ஒன்றிய அரசுடன் தமிழ்நாடு உரசலில் இல்லை. கடமையை செய்கிறோம் உரிமைகளை எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்," என்று கூறி முடித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...