அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம்

கோவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்த கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை வழங்கினர். அமைச்சர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


கோவை: கோவைக்கு வருகை தந்த தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை இன்று (29.08.2024) கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (CAGJMA) தலைவர் ரகுநாதன் சுப்பையா (SR) மற்றும் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, சங்கத்தினர் பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் ஆர்வமுடன் பொற்கொல்லர்களின் பிரச்சினைகளையும், தங்க நகை தயாரிப்பு பற்றியும் கேட்டறிந்தார்.

பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த உறுதிமொழிக்கு CAGJMA சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...