அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம்

கோவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்த கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை வழங்கினர். அமைச்சர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


கோவை: கோவைக்கு வருகை தந்த தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை இன்று (29.08.2024) கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (CAGJMA) தலைவர் ரகுநாதன் சுப்பையா (SR) மற்றும் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, சங்கத்தினர் பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் ஆர்வமுடன் பொற்கொல்லர்களின் பிரச்சினைகளையும், தங்க நகை தயாரிப்பு பற்றியும் கேட்டறிந்தார்.

பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த உறுதிமொழிக்கு CAGJMA சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...