அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம்

கோவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்த கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை வழங்கினர். அமைச்சர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


கோவை: கோவைக்கு வருகை தந்த தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை இன்று (29.08.2024) கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (CAGJMA) தலைவர் ரகுநாதன் சுப்பையா (SR) மற்றும் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, சங்கத்தினர் பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் ஆர்வமுடன் பொற்கொல்லர்களின் பிரச்சினைகளையும், தங்க நகை தயாரிப்பு பற்றியும் கேட்டறிந்தார்.

பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த உறுதிமொழிக்கு CAGJMA சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...