கோவை காந்திபுரத்தில் தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்: மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார்

கோவை காந்திபுரம் பகுதியில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதி. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கட்சியினர் கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் புகார் மனுவை அளித்தனர்.



அந்த மனுவில், காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வழிந்தோடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இப்பகுதியில் இரண்டு மழலையர் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் சாக்கடை தண்ணீரை நடந்து செல்பவர்கள் மீது தெளிப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் சாக்கடை வடிகாலை தூர்வார வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வார்டு அளவில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேரடியாக மாநகராட்சி உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவின் மீது மாநகராட்சி உதவி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...