கோவை காந்திபுரத்தில் தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்: மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார்

கோவை காந்திபுரம் பகுதியில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதி. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கட்சியினர் கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் புகார் மனுவை அளித்தனர்.



அந்த மனுவில், காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வழிந்தோடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இப்பகுதியில் இரண்டு மழலையர் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் சாக்கடை தண்ணீரை நடந்து செல்பவர்கள் மீது தெளிப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் சாக்கடை வடிகாலை தூர்வார வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வார்டு அளவில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேரடியாக மாநகராட்சி உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவின் மீது மாநகராட்சி உதவி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...