கோவை காந்திபுரத்தில் தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்: மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார்

கோவை காந்திபுரம் பகுதியில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதி. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கட்சியினர் கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் புகார் மனுவை அளித்தனர்.



அந்த மனுவில், காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வழிந்தோடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இப்பகுதியில் இரண்டு மழலையர் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் சாக்கடை தண்ணீரை நடந்து செல்பவர்கள் மீது தெளிப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் சாக்கடை வடிகாலை தூர்வார வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வார்டு அளவில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேரடியாக மாநகராட்சி உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவின் மீது மாநகராட்சி உதவி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...