கோவை காந்திபுரத்தில் தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்: மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார்

கோவை காந்திபுரம் பகுதியில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் அவதி. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்தோடுவது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநகராட்சி உதவி ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கட்சியினர் கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் புகார் மனுவை அளித்தனர்.



அந்த மனுவில், காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வழிந்தோடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இப்பகுதியில் இரண்டு மழலையர் பள்ளிகள், மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் சாக்கடை தண்ணீரை நடந்து செல்பவர்கள் மீது தெளிப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் சாக்கடை வடிகாலை தூர்வார வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வார்டு அளவில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நேரடியாக மாநகராட்சி உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவின் மீது மாநகராட்சி உதவி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...