தமிழ் புலிகள் கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கோரி திருப்பூரில் மனு

தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தமிழ் புலிகள் கட்சியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் சமூக நீதிக்காக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் போராடி களப்பணியாற்றி வருகிறார். அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது."

இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...