கோவையில் தொழில் முனைவோருக்கு ரூ.6.54 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கல்..!

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 46 தொழில் முனைவோருக்கு ரூ.6.54 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கினார். பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டது.



Coimbatore: கோவை கொடிசியா கூட்டரங்கில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டமும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 46 நபர்களுக்கு ரூ.6.54 கோடி மானியம் வழங்கப்பட்டது.



அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், "கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறையில் 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடந்த எட்டு மாதங்களில் இதுவரை 1,645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள தொழில் தொடங்காத வங்கிக் கடன் பெற்ற தொழில் முனைவோர்களை இங்கு அழைத்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வு காண அனைத்துத் துறை அதிகாரிகளும் இங்கே அழைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், இதுவரை ரூ.2,615 கோடியே 30 லட்சம் வங்கிக் கடன் தொழில் தொடங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. 30,324 தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு, 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.



தமிழக முழுவதும் சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச்சியை உருவாக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் தெரிவித்தால், முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் இத்துறையின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...