கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி: பரிசுக்காக குவிந்த உணவு பிரியர்கள்

கோவையில் போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் பங்கேற்றனர். ரூ.1 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் குவிந்தனர்.

போட்டியில் 3 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25,000, 4 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50,000, 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் கவரப்பட்ட உணவு பிரியர்கள், எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக வந்து குவிந்தனர்.



போட்டியாளர்கள் டோக்கன்கள் மூலம் குழுக்களாக பிரிக்கப்பட்டு, சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடத்தப்பட்டன. அரை மணி நேரத்தில் வரையறுக்கப்பட்ட அளவு பிரியாணிகளை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



சிக்கன் பிரியாணி பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால், அளவு அதிகமாக இருந்தது. இதனால் பலரும் திணறி திணறி சாப்பிட்டனர். சிலர் சாப்பிட முடியாமல் இடையிலேயே விலகினர்.

போட்டியில் பங்கேற்றவர்களில் கணேச மூர்த்தி என்பவர் தனது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்றதாக தெரிவித்தார். இது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவையில் இருந்து மட்டுமல்லாமல், கேரளாவிலிருந்தும் பலர் இந்த போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். உணவு பிரியர்களின் மகிழ்ச்சிக்காகவும், உதவி தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கிலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...