கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி: பரிசுக்காக குவிந்த உணவு பிரியர்கள்

கோவையில் போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் பங்கேற்றனர். ரூ.1 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் குவிந்தனர்.

போட்டியில் 3 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25,000, 4 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50,000, 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் கவரப்பட்ட உணவு பிரியர்கள், எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக வந்து குவிந்தனர்.



போட்டியாளர்கள் டோக்கன்கள் மூலம் குழுக்களாக பிரிக்கப்பட்டு, சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடத்தப்பட்டன. அரை மணி நேரத்தில் வரையறுக்கப்பட்ட அளவு பிரியாணிகளை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



சிக்கன் பிரியாணி பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால், அளவு அதிகமாக இருந்தது. இதனால் பலரும் திணறி திணறி சாப்பிட்டனர். சிலர் சாப்பிட முடியாமல் இடையிலேயே விலகினர்.

போட்டியில் பங்கேற்றவர்களில் கணேச மூர்த்தி என்பவர் தனது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்றதாக தெரிவித்தார். இது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவையில் இருந்து மட்டுமல்லாமல், கேரளாவிலிருந்தும் பலர் இந்த போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். உணவு பிரியர்களின் மகிழ்ச்சிக்காகவும், உதவி தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கிலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...