பொள்ளாச்சி அருகே இலங்கை தமிழர் குடியிருப்புகள் இடியும் நிலை: சார் ஆட்சியரிடம் முறையீடு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்கள், சிதிலமடைந்த குடியிருப்புகளால் பாதுகாப்பின்றி வாழ்வதாக சார் ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத் துறைக்குச் சொந்தமான குடியிருப்புகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்தும், சிதிலமடைந்தும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் உயிருக்கு அச்சம் கொண்டு வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர். சுமார் 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தங்களுக்கு அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டனர்.

குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைத்துத் தரக் கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் முறையிட்டனர். இந்த நிலையில், மாற்று குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...