சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைப்பு

கோவை மாவட்டம் சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்தது. இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்தது. நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மார்க்கெட் ரோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்துள்ளது.



இந்த நிலம் சூலூர் கிராம புல எண். 704/5 (பழைய புல எண்.422/15) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 400 சதுர மீட்டர் (10 செண்ட்) பரப்பளவு கொண்ட சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலமாகும்.



இந்த நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடத்தை எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்கும் வகையில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...