கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் திடீர் ஆய்வு - பள்ளி கட்டுமானம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டார்

கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டுமானம், மதிய உணவு தயாரிப்பு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (28.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு மண்டலம் வார்டு எண் 35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்புகள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 35க்குட்பட்ட புதிய நெசவாளர் காலனி, மூகாம்பிகை நகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்களை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் சந்தியா, மாமன்ற உறுப்பினர் சம்பத், மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...