கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் திடீர் ஆய்வு - பள்ளி கட்டுமானம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டார்

கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டுமானம், மதிய உணவு தயாரிப்பு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (28.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு மண்டலம் வார்டு எண் 35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்புகள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 35க்குட்பட்ட புதிய நெசவாளர் காலனி, மூகாம்பிகை நகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்களை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் சந்தியா, மாமன்ற உறுப்பினர் சம்பத், மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...