மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை நீதிமன்ற வளாகத்தில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இச்சட்டங்கள் பொதுமக்களுக்கு எதிரானவை என்றும், காவல்துறைக்கு சாதகமானவை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல், இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலக முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம், டெல்லியில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது," என்றார்.

மேலும் அவர், "அடுத்த மாதம் 30 ஆம் தேதி JAAC பொதுக்குழுவை கூட்டி, இந்திய அளவில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்க வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தார்.



இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது. புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டங்களை நடத்த வழக்கறிஞர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...