உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் கிருஷ்ணன் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் கொண்டாடினர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வேங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.



தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் மற்றும் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பத்மாவதி மண்டபத்தில் நாராயணீயம் பாராயணமும் நடத்தப்பட்டது. பக்தர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த ராதை மற்றும் கிருஷ்ணன் கொலு பொம்மைகளை வைத்து திருக்கல்யாணம், சங்கு பால் வைபவம், வெண்ணை காப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.

பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கிருஷ்ணருடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் கண்ணன் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் கொண்டாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...