கோவையில் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டம் சார்பில் வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் இந்துமுன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.

இதனையடுத்து இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி, தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது.

இதன் அடிப்படையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கி, 4 மணிக்குள் முடிவடைந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், "மத ரீதியாக பங்களாதேஷ் நாட்டில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை மத்திய அரசு நிச்சயம் ஏற்படுத்தி தர வேண்டும். இந்து கோவில்கள் உடைக்கப்படுகின்றன. அங்குள்ள இந்து மத குழந்தைகள், பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு இன்றி தவிக்கின்றனர்" என்று கூறி கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுசெயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்திக், மாவட்ட செயலாளர் படையப்பா (எ) முத்துகுமார், மாவட்ட பொருளாளர் அசோக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இந்துமுன்னணியினர், இந்து ஆட்டோ முன்னணியினர் கலந்துக்கொண்டனர். இறுதியில் இந்து ஆட்டோ முன்னணி விஷ்ணு நன்றி கூறினார்.

Newsletter

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...