கோவையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம்: 500க்கும் மேற்பட்டோர் கைது

கோவையில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



போராட்டக்காரர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமானவை: 14 மாத பஞ்சப்படி உயர்வு வழங்குதல், நீதிமன்ற தீர்ப்புகளை முழுமையாக அமல்படுத்துதல், 2022 டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.



போராட்டக்காரர்கள் தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நிதி இருப்பதாகவும், மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கூறப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இப்போராட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.



இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...