பல்லடம் அருகே மதுபோதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநரை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே பெங்களூர் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் அவரை சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டி.எஸ்.பி. விஜிகுமார் விசாரணை மேற்கொண்டார்.



Coimbatore: பல்லடம் அருகே தனியார் பேருந்தை மதுபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநரை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை அடைந்தபோது, பேருந்து தாறுமாறாக ஓடியதை கவனித்த பொதுமக்கள், பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை பரிசோதித்தனர்.



ஓட்டுநரிடமிருந்து ஜூஸ் பாட்டிலில் மதுவை கலந்து வைத்திருந்ததை கண்டுபிடித்த பொதுமக்கள், உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டுநர் வெங்கடாசலபதி (32) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி. விஜிகுமார், மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டால், ஓட்டுநரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். பின்னர், ஓட்டுநர் வெங்கடாசலபதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, பாதி வழியில் நின்றுவிட்ட பயணிகளுக்கு போலீசார் மாற்று ஓட்டுநரை ஏற்பாடு செய்து, பயணத்தை தொடர அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...