கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா: 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு

கோவை சிவானந்தா காலனியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலம் சென்றனர்.



கோவை: கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.



விழாவை முன்னிட்டு, ரத்தினபுரி பகுதியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வீதிகள் வழியாக சென்றது. குழந்தைகள் அணிந்திருந்த கிருஷ்ணர், ராதை வேடங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.



ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், சிவானந்தா காலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேடையில் தோன்றிய சிறுவர் சிறுமியர் பக்தி பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.



நிகழ்ச்சியில் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோவும் நடத்தப்பட்டது. இந்த மாய வித்தைகள் குழந்தைகளை பிரமிக்க வைத்தன. விழாவில் பங்கேற்ற அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...